குழந்தை ஒன்று
குழந்தை சுமக்கும்
அழகை
இரவெல்லாம்
பார்த்து
ரசிக்கிறேன்..
உன்
முகத்தில் விழும்
ஒற்றை முடியாய்
பிறக்க ஆசை...
ஆயுள்
முழுதும்
உன்னை தரிசிக்க...
புயலே
தென்றலாய்
வீசு
என்
ரோஜா
உறங்குகிறது....
மற்றுமொரு
தூங்காத இரவு
உன்னால்.....
சிற்பியாய்
உன்னை
என்னுள்
செதுக்கி
கொண்டிருக்கிறேன்
உன்னோடு
உறங்க......

உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்
போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
உணர்கிறேன் உன்
காதலை... .