இனியவளே . . . . .
உனக்காக . . . .
அழகு
இப்பொழுதெல்லாம்
அழகாய்
இருக்கிறேனாம்
என்னுள்
"நீ"
வந்ததாலோ ?
அர்த்தங்கள்
இன்னும் அர்த்தங்கள்
தேடிக் கொண்டிருக்கிறேன்
"அப்புறம்"
என்ற உன்
வார்த்தைக்கு மட்டும்......
இடைவெளி
குறைந்தது
நம்முள்
மட்டுமல்ல
நம்
குழந்தைகளின்
வயதும் தான்......,
வார்த்தைகள்
அற்ற
கவிதை
உன் மௌனம் .....,
உன் விழிப்
பார்வையில்
இழந்தது
என்னை
மட்டுமல்ல
என்
தூக்கத்தையும்
தான் .....,
இருந்தும்
இல்லாமல் இருப்பது
நம் காதல்
கவிதைகள் மீது.....
அட
என் பெயரும்
இனிமை தான்
உன்
பெயருக்கு பின்னால்
வரும்பொழுது.....,
மீண்டும் மீண்டும்
படையெடுத்தேன்
கஜினியை
குருவாக ஏற்று ..,
வெல்வேன் என்ற
கர்வத்தோடு ......,
உன் காதலுக்காக .....,
உண்மை பேசும்
உன்
கண்களை விட
பொய் பேசும்
உன்
உதடுகள் தான்
என்னை
கொல்லுதடி.....,
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)