புயலே
தென்றலாய்
வீசு
என்
ரோஜா
உறங்குகிறது....
மற்றுமொரு
தூங்காத இரவு
உன்னால்.....
சிற்பியாய்
உன்னை
என்னுள்
செதுக்கி
கொண்டிருக்கிறேன்
உன்னோடு
உறங்க......

உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்
போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
உணர்கிறேன் உன்
காதலை... .

குழந்தையாய்
தவித்துக்
கிடக்கிறேன்....
காதல்
பரிசாய் கிடைக்கும்
உன்
ஒற்றை
முத்ததிற்காக...